ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் – 3 Updated)

முந்தைய பகுதிகள்

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும்  செய்தது என்ன ?

எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.

 

தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.

  • முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான்.
  • சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன.
  • எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?

 

வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?

 

1. Reshaping global film industry

Tu_22406 Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.

By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm

2. For the first time, a movie from India will be dubbed in Japanese.

http://sify.com/finance/Rajini-fells-all-records-with-sci-fi-entertainer-Endhiran-imagegallery-others-kkdldrjaghh.html

3. Existance of Tamil Film industry

http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html 

People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.

Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories. 

4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."

Rajinikanth beats the Khans  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html

SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017. 

Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!

5. Undisputed Hero

Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”

It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx 

Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx

சும்மா அதிருதுல்ல :) தொடரும்…

எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினியும் தமிழ் பட உலகமும் எவ்வாறெல்லாம் தவறாக கேவலப்படுத்த பட்டனர் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்தி பட பிரமுகர்கள் நிறுவ முயன்றது கீழ் கண்டவற்றை தான்.

  1. தமிழ் பட உலகம் என்பது தொழில் நுட்ப ரீதியாக பின்னடைந்த நிறுவனங்களை கொண்டுள்ளது.
  2. பிராந்திய மொழியான தமிழில் தேசத்தை கவரும் பிரம்மாண்ட படம் எடுக்க இயலாது.
  3. ரஜினி போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடிக்கவே தெரியாத, முட்டாள் தனமான சைகைகளை மட்டுமே கொண்டு படம் அளிப்பவர்கள்.

 

விமர்சனங்கள் அவர்களுக்கே ஆப்பாக மாறியது எப்படி ?

இதற்கு ரஜினியின் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் நிகழ்த்த படாதது மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்தது. ரஜினி தன் எதிர் வினையை பேச்சில் காட்டாமல் தன் அடுத்த படமான எந்திரன் மூலமாக தந்துள்ளார். எந்திரன் நிறூபித்து காட்டி உள்ளது இவை தான்.

  1. தமிழ் பட உலகமானது இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்பத்தையும் கலைஞர்களையும் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் சினிமாவின் எல்லா தொழில் நுட்ப துறைகளிலும் தென் இந்திய கலைஞர்கள் இந்தி கலைஞர்களை விஞ்சியுள்ளனர். சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி கோப்பாளர், நடன இயக்குனர், சண்டை இயக்குனர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வரை மிகச்சிறப்பானவர்கள் இங்கேயே உள்ளனர்.
  2. எந்திரனின் இந்தி பதிப்பின் மூலம் இந்தி பட உலகிற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதியில் பிகார், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அணைத்து பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கும் படம் எந்திரன் தான்.
    Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films
    emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
    http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
  3. படத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலும் என்பதை ரஜினி காட்டி உள்ளார். ஆரம்ப பாடல் காட்சி இல்லாத, ரோபோவிற்கு பயப்படக்கூடிய, தன்னுடைய படத்தில் சாதாரண மனிதருக்கு பயப்படும் வேடத்தில் சராசரி விஞ்ஞானியாகவும் தன்முணைப்பு  இல்லாமல் தன்னால் நடிக்க இயலும் என்பதையும் ரஜினி காட்டி உள்ளார்.

    Black Sheep காட்சி ஒன்று போதும் ரஜினியின் நடிப்பு திறமையை புரிந்து கொள்ள. அதே காட்சியில் MGR, சிவாஜி, கமல் என மூவரையும் இமிடேட் செய்து நடித்ததை எத்தணை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

    ரஜினியின் வழக்கமான மசாலா படமாக இது அமையும், எல்லோரும் சேர்ந்து அசிங்க படுத்தாலாம் என்று நிணைத்தவர்களின் நிணைப்பிற்கு ஆப்பு வைத்துள்ளார்.

 

சவால்

இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் “இது முழுக்க முழுக்க தமிழ் பட உலகில் சென்னையை மையமாக கொண்டு தயாரான இந்திய படம். இந்தி சினிமா உலகிற்கு எந்திரனில் நேரடி சம்பந்தமில்லை. எந்திரன் இந்தி சினிமா உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால்.”

 

எந்திரனும் ரஜினியும், சாருக்கானையும், ஹிரித்திக் ரோசைனையும் படுத்தும் பாடு :)

Rajni_thumb57கீழ்காணும் செய்திகளெல்லாம் எப்போதும் வெளிவரும் கிசு கிசு செய்திகள் போன்று மிகைப்படுத்த பட்டவை அல்ல. சம்பந்த பட்டவர்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். “Robot SRK” என்று Google Search செய்து பாருங்கள் உண்மை தெரியும். http://www.google.co.in/search?q=robot+SRK&qscrl=1

 

இப்போது இவ்விரு நடிகர்களும் எவ்வாறு எந்திரனை விட சிறப்பாக  படம் செய்வது என இரவேல்லாம் தூங்காமால் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

ஹிரித்திக் ரோசைன் ரோபோவின் தொழில் நுட்பங்களுடன் போட்டி போட முடியாமல் தன்னுடைய அடுத்த படமான் கிரிஷ் – 2 வின் படப்பிடிப்பையே தள்ளி வைத்துள்ளார்.

 

King Kong SRK (எழுத்து பிழை அல்ல)

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2010/rajinikanth-endhiran-shahrukh-ra-one-071010.html

According to reports, King Khan, director Anubhav Sinha, sound engineer Resul Pookutty had a lengthy meeting at SRK's house on last Sunday. They had a brainstorming session, discussing about the movie, especially about the quality of the film and its climax.

Hrithik Roshan

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/SRK-Hrithiks-Robot-phobia/articleshow/6711037.cms

Rajnikanth starrer Robot pushed the panic buttons in Shah Rukh Khan's office. It is now doing the same in Rakesh Roshan's office.

We then asked him if Krrish 2 was taking time since he wanted to raise it to the highest standards possible. To this he replied, "No, not correct. I might start Krrish; wait for the announcement."

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Hrithik-wants-to-beat-Rajnikanth/articleshow/6672271.cms

Hrithik Roshan is neck deep in meetings with his father, Rakesh Roshan's team of writers. Now everyone knows that scripts involving Indian super-heroes will need plenty of brain-storming, espe-cially after Rajnikanth's latest film. The SFX and the canvas of the Rajni-Ash bilingual is making Bollywood nervous. All those dealing with super-heroes in their projects know they will have to take things to the next level if they want to surpass what Rajni Sir has already done.

 

வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு இன்னும் எரிய [BBC Review]

    1. Smart lines, diabolical characters, high-voltage action and impressive special effects make this a promising Indian popcorn movie.
    2. The movie is also the product of an industry which is fast becoming globalised, despite its unique brand of cinema.
    3. As so often, Rajinikanth steals the show.
      http://www.bbc.co.uk/news/world-south-asia-11498630

எந்திரன் அணைத்து வசூல் சாதணைகளையும் முறியடித்த விவரம் [Rs 117cr in just 7 days, 'Robot' Rajini smashes all records]

http://timesofindia.indiatimes.com/india/Rs-117cr-in-just-7-days-Robot-Rajini-smashes-all-records/articleshow/6716660.cms

The Hindi version of the film Robot too has done a business of nearly Rs 30 crore in the first week. Amod Mehra said, ''Robot has broken all the norms of a dubbed film. I don't remember any dubbed film crossing even the one crore mark."

[ இன்னும் வரும்…;) ]

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

 

எந்திரனுக்கு முன் – 1

தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

- மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

 

எந்திரனுக்கு முன் – 2

ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

- Grady Hendrix http://www.slate.com/id/2267820/

 

என்ன காரணம் ?

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

ஓம் சாந்தி ஓம்

சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

பிரிவு துயரம் – பத்மஸ்ரீ வாலியின் வைரவரிகள்

காதலன் தன் பிரிவு துயரை தன் கண்மணிக்கு தெரியப்படுத்தும் ஒரு அருமையான பாடல், சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ‘சிக்கு புக்கு’ படத்தில் கேட்க நேர்ந்தது.

 

பத்மஸ்ரீ வாலி அவர்கள் முதல் வரியின் கவித்துவ உவமையிலிருந்தே மனம் கவர்கிறார். சூபி இசையில் அமைந்த தமிழ் காதல் பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் அளிக்கிறது. இசையமைப்பாளர் பாடகர்களின் மொழி உச்சரிப்பை மெருகூட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

 

பாடல்: தூரல் நின்றாலும்

பாடல் வரிகள்: பத்மஸ்ரீ வாலி

பாடகர்கள்: ஹரிஹரன், வடாலி சகோதரர்கள்

இசை: ஹரிஹரன் & லெஸ்லி

 

உன்னை, உன்னிடம் தந்து விட்டேன்

நீ, என்னை என்னிடம் தந்து விடு

போதும், போதும், எனை போக விடு

கண்மணி எனை போக விடு

கண்மணி கண்மணி

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

உயிரே உயிரே

 

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே! [ எனை போக விடு கண்மணி]

    விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள் சென்றதே !!

இனியும் உன் பெயரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா ?

    எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா ?!

 

விடைகள் இல்ல வினாக்கள் தானடி

 

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

 

Thanks: http://tamilyrics.wordpress.com/2010/09/11/thooral-nindralum-chikku-bukku-lyrics/

Unnai unnidam thanthu vitten
nee ennai ennidam thanthu vidu
podhum podhum enai poga vidu

kanmani enai poga vidu
kanmani kanmani

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

uyire uyire

unnai ketkamal ennai ketkamal kadhal undanathey

enai poga vidu kanmani

vizhigal engindra vaasal vazhiyaga kadhal ulsendrathey

iniyum un perai en nenjodu otti vaipadhaa

enadhu porul alla neethaan endru etti vaippadha

vidaigal illa vinakkal thaanadi

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile

 

Thanks http://blog.mp3hava.com/download-mp3-sogns-chikku-bukku-chikku-bukku-songs-wallpapers-photos-images-posters-gallery-trailer-blog-mp3hava-com/2010

Cast : Arya, Shriya, Preetika Rao (Sister of Bollywood Actress Amrita Rao)
Camera : R.B. Gurudev
Dialogues written by : S. Ramakrishnan
Lyrics : Padmashree Valee, Pa. Vijay
Music : Hariharan and Leslie
Choreographers : Rekha Chinni Prakash and Dinesh
Director: Manikandan
Producer: Metro Films

நான் ஒரு சுதந்திர பிறவி – மாயா (MIA) [18+]

MIA மாயா (M.I.A.) எனும் ஆங்கில பாடகியை தெரியுமா ? மாதங்கி 'மாயா' அருள்ப்ரகாசம் http://en.wikipedia.org/wiki/M.I.A._%28artist%29. முக்கியமானது இவர் தமிழினத்திற்காக தொடர்ந்து பாடும் ஒரே பாடகி என்பது தான். பாரதிக்கு பிறகு புரட்சி பாடும் ஒரே தமிழர் இவர் தான் [ஆனால் ஆங்கிலத்தில்] இவரின் Sunshowers வீடியோ மிகவும் பிரச்சித்தமானது.

 

சமீபத்தில் மாயாவின்(MIA) வின் “Born Free” வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் அரச வன்முறை இன பாகுபாட்டுடன் இளைஞர்களின் மேல் செயல்படும் விவரத்தை தோலுரித்து காட்டி இருந்தார். இப்படத்தில் மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்கங்கள் மோசமான முறையில் மீறப்படுவதும், மனிதர்கள் மிருகங்கள் போல் நடத்தப்படுவதும் சித்தரிக்கப்படுகிறது.  இவ்வீடியோவை யுஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது. YouTube இருந்தும் நீக்கபட்டுள்ளது. ஏனெனில் சித்தரிக்க பட்டுள்ளது, யுஸ் வீரர்கள் அந்நாட்டின் சிறுபான்மையினரை துன்புறுத்துவது போல.

”இம்மலத்தை நின்முகத்தில் வீசுவேன், உனை காணும்போது

ஏனெனில் நான்மொழிய சிலஉண்டு.

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

”தலைவனே நீ யாரேனும், எங்கிருப்பினும் வெளியாகி
இவர்களிடம் சொல்

சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

சிலருக்கு வீடியோவின் சில காட்சிகள் ஆபாசமாகவும், வன்முறையாக தோன்றலாம். [குழந்தைகள் பார்க்க வேண்டாம். அலுவலகத்தில் பார்க்க வேண்டாம்] ஆனால் நாமெல்லாம் சக இனத்தவர்கள் தலையில் சுட்டதையும், பிணங்களை கற்பழித்ததையும், ஆனந்தர்களின் வீடியோக்களையும் கூசாமல் நடுவீட்டில் அமைதியாக பார்த்தவர்களாயிற்றே ?! சலன படத்தில் உள்ள கருத்தை முன்னிட்டு இதையும் பார்க்கலாம் தப்பில்லை.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

 

என்ன நடந்தாலும் தங்களின் பண வருவாயை மட்டுமே குறியாக இருக்கும் தமிழக கலைஞர்கள் தங்களது சூடு சொரணையை சோதித்து கொள்ள செய்யும் அளவிற்கு இச்சலனப்படம் உள்ளது தான் சிறப்பு. இவ்வீடியோ வெளிவந்தது ஏப்ரல் மாதம்!!! இசை விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் எழுதாதது வியப்பிற்குறியது. 

 

இப்பாடலை தனியாக கேட்கும் போது இசை மிகவும் ஏமாற்றம் அளித்தது போல இருந்தது. ஆனால் சலனப்படம் பாடலின் உயிரோட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.

 

ஆங்கில விமர்சனங்கள்

http://latimesblogs.latimes.com/music_blog/2010/04/mia-makes-her-stance-utterly-clear-with-born-free-video-1.html

"Born Free" is a heavy concentrating agent that fully shows M.I.A.'s intention to say radical and aligned with her own vision of what's real. Considering the strong track record of this still-young artist, that's not shocking.

 

http://www.refinedhype.com/hyped/entry/meaning-behind-m.i.a.-born-free-video/

However before I can discuss a meaning, I need to give a small background on MIA. ”One Man’s Freedom Fighter is Another Man’s Terrorist”

http://globalcomment.com/2010/m-i-a-s-born-free-a-statement-we-need-to-hear/

it’s awful to watching such terrible things happen to someone like you. Getting outraged is the whole point. Racial and ethnic distinctions are often as arbitrary as hair color, but it’s easy for people to ignore that fact when physical characteristics are our first test of otherness.


http://trueslant.com/leorgalil/2010/04/26/finding-meaning-in-m-i-a-s-born-free-video/

the great thing about the video is it really reflects one’s thoughts on pop music and culture. It can be as vapid and pointless as you want it to be, but if you really want to give it a chance, the second viewing can be so much more rewarding.

 

பாடல் Thanks http://www.metrolyrics.com/born-free-lyrics-mia.html

Whooo!
Yeah man made powers
Stood like a tower higher and higher hello
And the higher you go you feel lower, oh
I was close to the end staying undercover
Staying undercover


With a nose to the ground I found my sound
Got myself an interview tomorrow
I got myself a jacket for a dolla
And the car doesn't work so I'm stuck here
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see ya
I got something to say
I throw this shit in your face when I see ya
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)

bo-bo-born free


You could try to find ways to be happier
You might end up somewhere in Ethiopia
You can think big with your idea
You ain't never gonna find utopia
Take a bite out of life make it snappier yeah

Ordinary gon super trippyer
So I check shit cause I'm lippyer
And split a cheque like Slovakia
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see you
I got something to say
I throw this shit in your face when I see you
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free
Ooooh


I don't wanna talk about money, 'cause I got it
And I don't wanna talk about hoochies, 'cause I been it
And I don't wanna be that fake?, but you can do it
And imitators, yeah, speak it
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
And tell em!


Born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free

தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

ஜனநாயகமும், இந்தியாவும்

 

கருத்து சுதந்திரமும், பாசிசமற்ற நிலையும் தான் ஜனநாயம் ஒரு நாட்டில் சிறப்பாக நடைபெறுவதற்கான எடுத்துகாட்டுகள். தன் நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ஒரு யுஎஸ் குடிமகன் கீழே. அவரது தனிப்பட்ட அரசியல் நிலையை விட்டு விடலாம். ஆனால் அந்நாட்டின் கருத்து சுதந்திரம் தான் நாம் கவனிக்க வேண்டியது.

 

t-shirt-give-tiger-a-breakThanks http://www.stevenhumour.com/2010/07/24/t-shirt-give-tiger-a-break/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+StevenHumour+%28Steven+Humour%29&utm_content=Google+Reader

 

இது இந்தியாவில்/தமிழகத்தில் சாத்தியமா ? ஆளுபவர்களை சிறிய அளவில விமர்சனம் செய்து தன் கருத்தை வெளியிடுபவர்களை கூட என்ன செய்து கொண்டிருக்குறது இந்த அரசாங்கங்கள் ? எந்த குடிமகனாவது அரசியலவாதிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு சுமூகமாக வீடு திரும்புவோம்  என்ற நம்பிக்கையுடன் உள்ளனரா ?  இல்லையெனில இங்கு நடைபெறுவது ஜனநாயகமா ?

 

ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு வாழ்வதும் ஒரு சுதந்திர வாழ்க்கையா ? பாரதியும், பகத்சிங்கும், நேதாஜியும் விடுதலைக்காக பாடுபட்டது மக்கள் பயந்து, பயந்து கோழைகளாக வாழ்வதற்கா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை வாழ்க்கை நம் மக்களை மந்தைகளாக மட்டுமே ஆக்கியிருக்கிறது.

 

சமீப காலங்களில் நிகழும் பாசிச செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி தோல்வியுற்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை நினைத்து பெருமை பட முடியுமா ? “Proud to be an Indian/Tamilian” புத்தகங்களில் மட்டும் :(

மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்

அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.

அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர்  படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.

புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.

அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.

--**--

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?

அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார &  கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.

  1. உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு

  2. அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)

  3. பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )

  4. பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.

வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்

இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?

சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?

  • சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்

  • பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,

  • இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,

  • சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்

  • சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)

  • சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்

என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.

இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது  :(

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

 

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


 


[தான தொ தனன,தான தொ தனன]


Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……


Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]


Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

 

இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

 

Thanks

http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

என்ன என்ன என்ன ஆகிறேன் ?… என் காதலே ?… ;)

வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.

 

 

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 


பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்

மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 

விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்

உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ? 
செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…

தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.

பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

எனும் இதமான பாடல்.

 

இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

 

[இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

Play - Saami Varuguthu Kaathal

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

சாமி வருகுது காதல் சாமி வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

 

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

[சாமி வருகுது]

 

மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

 

ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

Kungumatha Vaika Oru Nethi Varuguthu
Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

[சாமி வருகுது]

 

[நாதஸ்வர ஆவர்த்தனம்]

 

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

Ul Nenjil Undiyalai Aada Varuguthu
Ul Nenjil Undiyalai Aada Varuguthu

Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

 

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

[சாமி வருகுது]

 

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

 

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen

கூகிள் புவியை உலாவியில் பயன்படுத்த (Google Earth)

கூகிள் புவி தனியாக கண்ணியில் நிறுவப்படவில்லையெனில் உலாவியில் (Browser) நேரடியாக பார்க்க இயலும். இப்பயன்பாட்டினை உபயோகிக்க கூகிள் புவி பிளக்-இன் தேவைப்படும். அதை கீழ் காணும் முகவரியில் பதிவிறக்கி கொள்ளலாம். http://earth.google.com/plugin/ . உங்களது உலாவியில் கூகிள் புவி பிளக்-இன் சரியாக நிறுவப்பட்டு இருந்தால் கீழே கூகிள் புவி பயன்பாடு தெரியும்.

தகவலை கொணர்கிறது. காத்திருக்கவும்...

நாசாவின் விண்கலங்களில் உங்களது பெயரும், புகைப்படமும் இடம் பெற !!!

விண்வெளி வீரர்களுடன் பறக்க இருக்கும் விண்கலத்தில் உங்களது பெயரும், புகைப்படமும் இடம் பெற வேண்டுமா ? கீழே குறிப்பிட்டு இருக்கும் நாசா இணைய தளத்தில் உங்களது தகவல்களை பதியுங்கள்(இலவசமானது). இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் விண்கலம் விண்ணிற்கு சென்று திரும்பியதும், தலைமை அதிகாரியின் (Mission Commander) கையொப்பமிட்ட கௌரவ சான்றிதலும் (commemorative certificate) வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க தகுதி பங்கேற்பவருக்கு 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதாக இருக்க வேண்டும். மேஜராகாத குழந்தைகளுக்காக பெற்றோரோ பாதுகாவலரோ தகவல்களை அனுப்பலாம்.

http://faceinspace.nasa.gov/index.aspx

 

நாசா தன் விண்பயண ஆராய்ச்சிகளின் கடைசி இரண்டு திட்டங்களாக இவ்வாண்டு இருமுறை விண்கலங்களை (டிஸ்கவரி, எண்டோவர்) செலுத்த உள்ளது. இவ்விண்கலன்களில் ஏதேனும் ஒன்றில் உங்களது பெயரும் புகைப்படமும் இடம் பெறும். அவ்விண்கலன்களின் விவரங்கள் கீழே

Discovery's STS-133 mission

The STS-133 crew members are Commander Steven Lindsey, Pilot Eric Boe and Mission Specialists Alvin Drew, Michael Barratt, Tim Kopra and Nicole Stott. Discovery will deliver the Express Logistics Carrier 4 and critical spare components to the International Space Station. This will be the 35th shuttle mission to the station.

http://www.nasa.gov/mission_pages/shuttle/shuttlemissions/sts133/index.html

 

Endeavour's STS-134 mission

The STS-134 crew members are Commander Mark Kelly, Pilot Gregory H. Johnson and Mission Specialists Michael Fincke, Greg Chamitoff, Andrew Feustel and European Space Agency astronaut Roberto Vittori. Endeavour will deliver spare parts including two S-band communications antennas, a high-pressure gas tank, additional spare parts for Dextre and micrometeoroid debris shields. This will be the 36th shuttle mission to the International Space Station.

http://www.nasa.gov/mission_pages/shuttle/shuttlemissions/sts134/index.html

 

ஏன் இது போன்ற வசதி அளிக்கப்படுகிறது ?

"The Space Shuttle Program belongs to the public, and we are excited when we can provide an opportunity for people to share the adventure of our missions," said Space Shuttle Program Manager John Shannon. "This website will allow you to be a part of history and participate as we complete our final missions."

 

விண்பயண ஆராய்ச்சி செயலானது பொது மக்களுக்கு உரிமையுடையது. மேலும் நாங்கள் (நாசா அமைப்பினர்) பொது மக்களுக்கு ஆராய்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளோம்.

இந்த இணையதளமானது (நாசா) உங்களை வரலாற்றில் ஒரு பகுதியாக இணைத்து கொள்ளவும் எங்களது செயலில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கிறது.

- செயல்திட்ட மேலாளர் திரு. ஜான் செனான்.

 

இதன் மூலம் என்ன பயன் ?

461782main_soi_690 

பொதுவாக அறிவியல் படிக்கும் போது மாணவர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விசயத்தை கற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதன் மேலான ஆர்வத்தை குறைக்கிறது. ஆனால் இத்தளத்தில் இது தொடர்பான செயல் திட்டம், வீரர்கள், அறிவியல் தகவல்களை பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புக்கள் இன்றைய மாணவர்களிடம் அறிவியல், வானியல் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கும் என்பது உறுதி.

 

மேலும் விவரங்களுக்கு,

http://www.nasa.gov/home/hqnews/2010/jun/M10-091_Face_in_Space.html

சோதிடம்-7 சந்திர சுழற்சியும், ராகு( Rahu), கேது (Kethu) வின் அவசியமும்?

ராகு( Rahu), கேது (Kethu) வின் அறிவியல் தன்மைகள்

ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்ள புவி, நிலவு, ரவி பற்றி அடிப்படைகள் அவசியமானது ஆகும்.

 

புவி சுழற்சி

globespin  axialtiltobliquity

 

  • கோள (உருண்டை) வடிவ பூமியானது தன்னையும், சூரியனையும் கடிகார எதிர் திசையில் சுற்றுகிறது. 
  • முதல் படத்தில் உள்ளது போல் புவி ஒரு குறிப்பிட்ட அச்சை (Rotation Axis) கொண்டு சுற்றினாலும் அவ்வச்சானது சூரியனுக்கு நேராக இல்லை.
  • அச்சின் மேல்பகுதி  வட துருவம் (North Celestial Pole) எனவும் கீழ் பகுதி தென் துருவம் (South Celestial Pole) எனவும் அழைக்கப்படும். புவி அச்சை கொண்டு பூமத்திய பகுதியை ஒரு கற்பனை கோடு வரைந்தால் கிடைப்பது பூமத்திய ரேகை (Celestial Equator) எனப்படும்.
  • புவி அச்சும் பூமத்திய ரேகையும் (Rotation Axis) சூரியனுக்கு 23 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது Axis tilt or Obliquity என்று அழைக்கப்படுகிறது.

 

சந்திர சுழற்சி

lunar_perturbation

  • நிலா புவியையும், புவி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. அதாவது நிலா புவியை ஒரு குறிப்பிட்ட நாள்களில் அருகாமையில் இருக்கும். புவிக்கு நிலா மிக அருகில் இருக்கும் இடம் Perigee எனப்படும்[During perigee, the moon is at it's closest distance to the earth (about 375,200 km)]. இதே போல நிலா புவிக்கு மிக தொலைவில் இருக்கும் இடம் Apogee எனப்படும் (the moon is at it's greatest distance[about 405,800 km] from the earth)
  • நிலா ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 29.5 நாள்கள். இது சினாடிக் மாதம் Synodic Month எனப்படும்
  • புவியும் சூரியனை சுற்றி வருவதால் ஒரு மாதத்தில் தோராயமாக 360 பாகையில் 12ல் ஒரு பங்கு சுற்றுகிறது.
  • எனவே நட்சத்திர மண்டல குறியீடாக கொண்ட வான் காட்சியில் அதே நட்சத்திரத்தில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 27.3 நாள்கள். இது சைடீரியல் மாதம் Sidereal Month எனப்படும. இதை கீழுள்ள வீடியோவின் மூலம் விளங்கி கொள்ளலாம்.
 
 

 

350px-Earth-Moon

மேலேயுள்ள படம் கிரகணங்கள் தோன்றுவதை புரிந்து கொள்ள முக்கியமானது ஆகும். இப்படத்தில் புவிசுற்றுபாதை நீல நிறத்திலும், நிலவின் பாதை சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

  • சந்திர சுழற்சி படத்தில் குறிப்பிட்டபடி சூரியனது பாதையில் நிலவின் பாதை இரு இடங்களில் வெட்டும்.
  • சந்திரன் எதிர்கடிகாரதிசையில் சுற்றுவதால் முதலில் வெட்டும் இடம் Ascending  Node (AN) எனவும் அதன் எதிர்பகுதி Descending Node (DN)  எனவும் அழைக்கப்படும்.
  • இப்படத்தில் குறிப்பிட்டபடி சந்திரன் புவியை சுற்றும் பாதை பூமியின் சுற்றுபாதைக்கு சிறிதளவே மாறுபடுகிறது. வித்தியாசம் 5.14 பாகை மட்டுமே.
  • எனவே சூரிய சந்திர பாதைகள் வெட்டும் புள்ளிகளில் சந்திரனும் சூரியனும்  நேராக வரும் போது மட்டுமே கிரகணங்கள் தோன்ற முடியும் என்பது உணர தக்கதே.

 

மேலும் சில அறிவியல் துளிகள்

  • புவியின் விட்டம் (Actual diameter of the earth) ~12,756 km
  • நிலவின் விட்டம் (Actual diameter of the moon) ~3476 km
  • ரவியின் விட்டம் (Actual diameter of the sun) 1,390,000 km
  • புவி நிலவிற்கு இடையேயான தூரம் (Average distance between the earth & moon) ~384,000 km
  • புவி ரவிக்கு இடையேயான தூரம் (Average distance between the earth & sun) ~150,000,000 km
  •  

    அடுத்த பகுதி: சோதிடம்-8 கிரகணங்கள், ராகு( Rahu), கேது (Kethu) க்களால் ஏற்படுவது உண்மையா ?

    [தொடரும்]

    சோதிடம்-6 சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

    ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

     

    அறிவியல் உண்மைகள்

    • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
    • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
    • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
    • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
    • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

     

    moon_phases_diagram

     

    ராகு, கேது

     

    ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

     

    சாயா என்பதன் பொருள் என்ன ?

    நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

     

    ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

    இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே  சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

    Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

    --http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

     

    ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

    • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
    • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர். 

     

    எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

    rahuketu_thumb[1]

     

    அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

     lunar_perturbation

     

     

    அடுத்த பகுதியில்…

     

    [தொடரும்]

    சோதிடம்-5 பௌர்ணமி, அமாவாசை

    சூரியோதயம், சந்திரோதயம்

    சென்ற பகுதியில் கிரகங்களின் உதயம் பற்றி பார்த்தோம். இப்போது பூமியில் அடிக்கடி நிகழும் கிரக உதயங்களான சூரியோதயம் மற்றும் சந்திரோதயம் பற்றியும் இவற்றால் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளான  பௌர்ணமி, அமாவாசை பற்றி பார்ப்போம்.

    300px-geometry_of_a_total_solar_eclipse.svg

    அமாவாசை

    சாதாரணமாக அமாவாசை என்பது சந்திரன் வராத நாள் என்றும், பௌர்ணமி என்பது முழு நிலவு வரும் நாள் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அமாவசையில் சந்திரன் உதிக்கிறது. ஆனால் சூரியன் உதிக்கும் அதே நேரம் உதிக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் விசயம் அல்லவா ? கீழேயுள்ள இம்மாத அமாவாசை நாளன்று ஏற்படும் உதய தகவல்களை காண்க.

    சூரிய உதயம் சந்திர உதயம் காண உதவும் பக்கம் http://aa.usno.navy.mil/data/docs/RS_OneDay.php

    தமிழக நகரங்களின் பூமியின் இருப்பிடம் காண உதவும் பக்கம்  Latitude and Longitude of Important locations in Tamilnadu

     

    Sun and Moon Data for One Day

    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):

            Saturday
            12 June 2010          Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:55                
            Sun transit               12:18                
            Sunset                    18:42                
            End civil twilight        19:05                

    MOON
            Moonset                   17:43 on preceding day
            Moonrise                  05:29                
            Moon transit              12:06                
            Moonset                   18:43                
            Moonrise                  06:31 on following day

    New Moon on 12 June 2010 at 16:44 (Universal Time + 5:30).

    அதாவது திருச்செங்கோட்டில் 12 தேதி சூரிய உதயம் 05:55 AM ஆனால் சந்திர உதயமும் 05:29 AM தான் நடைபெறும். எனவே சூரிய ஒளியில் சந்திரன் நமக்கு தெரிவதில்லை. சந்திரன் 18:43 PM மறைந்து விடுவதால்(அஸ்தமனமும்) நமக்கு சந்திர ஒளி இரவில் கிடைப்பதில்லை.


    பௌர்ணமி

    இதற்கு எதிர்மாறாக பௌர்ணமியில் சந்திரன் தோராயமாக சூரிய அஸ்தமனத்தின் போது உதிக்கிறது. கீழேயுள்ள இம்மாத பௌர்ணமியின் போது உதய தகவல்களை காண்க.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Saturday
            26 June 2010          Universal Time + 5:30         
    SUN
            Begin civil twilight      05:34                
            Sunrise                   05:57                
            Sun transit               12:21                
            Sunset                    18:45                
            End civil twilight        19:08                

    MOON
            Moonrise                  17:54 on preceding day
            Moon transit              23:44 on preceding day
            Moonset                   05:35                
            Moonrise                  18:46                
            Moonset                   06:29 on following day
    Full Moon on 26 June 2010 at 17:01 (Universal Time + 5:30).

     

    அதாவது திருச்செங்கோட்டில் 26 தேதி சூரிய அஸ்தமனம் 18:45 PM ஆனால் சந்திர உதயமும் 18:46PM தான் நடைபெறும். எனவே நமக்கு முழு சந்திர ஒளி இரவில் கிடைக்கும்.


    7ம் நாள் (சப்தமி) அன்று


    வளர்பிறை சப்தமி(18 ஜீன் 2010) அன்று நடுபகலில் சந்திர உதயம் ஏற்படும். தேய்பிறை சப்தமி (4 ஜுன் 2010) அன்று நடுஇரவில் சந்திர உதயம் ஏற்படும்.


    moonphasediagram.jpeg

    விளக்க குறிப்புகள்

    பூமியின் பகல் வெள்ளை நிறத்தில், இரவு கருமை நிறத்தில் உள்ளது. புவியின்  ஒரே இடம் வெவ்வேறு நிலைகளில்(உதய,அஸ்தமனம்) கொடியினால் குறிக்க பட்டுள்ளது.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Friday  
            4 June 2010           Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:54                
            Sun transit               12:17                
            Sunset                    18:39                
            End civil twilight        19:02                

    MOON
            Moonrise                  23:41 on preceding day
            Moon transit              05:44                
            Moonset                   11:49                
            Moonrise                  00:17 on following day
    Phase of the Moon on 4 June:   waning gibbous with 56% of the Moon's visible disk illuminated.

    Last quarter Moon on 5 June 2010 at 03:43 (Universal Time + 5:30).


    [தொடரும்]

    பதிவுலகிற்கு ஒரு வேண்டுகோள்

     

    யாரை ஆதரிப்பது / எதிர்ப்பது ?

    தமிழ் பதிவுலகில் மனதிற்கு வருத்தமளிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக அறிகிறேன். எப்போதெல்லாம் பதிவின்/பின்னூட்டத்தின் கருத்துக்களை விட்டுவிட்டு பதிவரின் மேல் சொற்கணைகள் வீசப்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்கிறேன். இரு தனிப்பட்ட நண்பர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு இப்போது ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி பிரச்சிணை போன்ற பல்வேறு வடிவங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    நான் விரும்பும் ஒரு பதிவர் மனதால் காயமுற்று இருக்கிறார். மற்றொரு நண்பரோ பதிவுலகில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேறுவதாக சொல்லி இருக்கிறார். இது ஒரு loss & loss  நிலைமை. அதாவது இருதரப்பினருமே காயம் பட்டு இருக்கின்றனர்.

    நர்சிம் அவருடைய இடுகையை நீக்கி விட்ட நிலையில் இருவரின் மனப்புண்ணையும் நோண்டி நோண்டி பெரிதாக்குவதை விட்டு விட்டு இது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விடயமாக கருதி அனைவரும் விலகி நிற்பதே நல்லது என தோன்றுகிறது. (மற்றவர்களின் பதிவை படித்தே பிரச்சிணையை பெரும்பாலானோர் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன்)

     

     

    வேண்டுகோள்

     

    விளையாட்டாக ஆரம்பிக்கும் விசயங்கள் தான் எப்போதும் மிகமோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். நமக்கு நகைச்சுவையாக இருக்கும் கருத்து அடுத்தவர் மனதை புண்படுத்தி விடுமா என்பதை எழுதும் முன் சீர் தூக்கி பாருங்கள்.

    எப்போதும் கோபத்தில் பதிவு எழுதாதீர்கள். அதிலும் அடுத்தவர்களை பற்றியது எனில் பதிவு செய்து ஒரு நாள் பொறுமையாக இருந்து விசயங்களை மனதில் ஆராய்ந்து மனதிற்கு உகந்ததாக இருந்தால் மட்டும் பதியுங்கள். பின்பு அதை நீக்க வேண்டிய தேவை இருக்காது.

    இந்த நிகழ்விலும் நடந்தது அதுவே. எனவே எப்போதும் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை செய்யுங்கள். தனிப்பட்ட பதிவர்களின் சொந்த விசயங்களுக்கு அல்ல.

     

    எது நம்மை இணைக்கிறது ?

    நண்பர்களே உலகமெல்லாம் இருக்கும் நம் உள்ளங்களை இணைக்கும் ஒரே சொல் அது “தமிழ்”. அது நம்மை இணைக்கவே செய்கிறது. நாமே நம்முள் பிரிந்து கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒருவருக்கொருவரின் முகம் தெரியாமல் மனம் அறியாமல் தமிழன் என்ற ஒரே உணர்வே நம்மை இணைக்கிறது.

    நரசிம்மின் இராமாயண விளக்கங்களை விரும்பும் நான், சந்தணமுல்லையின் கம்யூனிச கருத்துக்களையும் விரும்பி படிக்கிறேன். இது இரண்டும் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இரண்டுமே தமிழிற்கு அழகு சேர்ப்பவையே. இவற்றில் எதை இழந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு பகுதியை இழப்பது தான்.

     

    [பி.கு. நண்பர்கள் இருவரையும் நான் சந்தித்தது கூட இல்லை. இதில் இருக்கும் கருத்து, நன்மையை எதிர் நோக்கியே எழுதப் பட்டது.]