தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

ஜனநாயகமும், இந்தியாவும்

 

கருத்து சுதந்திரமும், பாசிசமற்ற நிலையும் தான் ஜனநாயம் ஒரு நாட்டில் சிறப்பாக நடைபெறுவதற்கான எடுத்துகாட்டுகள். தன் நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ஒரு யுஎஸ் குடிமகன் கீழே. அவரது தனிப்பட்ட அரசியல் நிலையை விட்டு விடலாம். ஆனால் அந்நாட்டின் கருத்து சுதந்திரம் தான் நாம் கவனிக்க வேண்டியது.

 

t-shirt-give-tiger-a-breakThanks http://www.stevenhumour.com/2010/07/24/t-shirt-give-tiger-a-break/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+StevenHumour+%28Steven+Humour%29&utm_content=Google+Reader

 

இது இந்தியாவில்/தமிழகத்தில் சாத்தியமா ? ஆளுபவர்களை சிறிய அளவில விமர்சனம் செய்து தன் கருத்தை வெளியிடுபவர்களை கூட என்ன செய்து கொண்டிருக்குறது இந்த அரசாங்கங்கள் ? எந்த குடிமகனாவது அரசியலவாதிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு சுமூகமாக வீடு திரும்புவோம்  என்ற நம்பிக்கையுடன் உள்ளனரா ?  இல்லையெனில இங்கு நடைபெறுவது ஜனநாயகமா ?

 

ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு வாழ்வதும் ஒரு சுதந்திர வாழ்க்கையா ? பாரதியும், பகத்சிங்கும், நேதாஜியும் விடுதலைக்காக பாடுபட்டது மக்கள் பயந்து, பயந்து கோழைகளாக வாழ்வதற்கா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை வாழ்க்கை நம் மக்களை மந்தைகளாக மட்டுமே ஆக்கியிருக்கிறது.

 

சமீப காலங்களில் நிகழும் பாசிச செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி தோல்வியுற்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை நினைத்து பெருமை பட முடியுமா ? “Proud to be an Indian/Tamilian” புத்தகங்களில் மட்டும் :(

மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்

அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.

அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர்  படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.

புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.

அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.

--**--

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?

அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார &  கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.

  1. உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு

  2. அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)

  3. பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )

  4. பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.

வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்

இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?

சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?

  • சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்

  • பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,

  • இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,

  • சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்

  • சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)

  • சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்

என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.

இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது  :(

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

 

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


 


[தான தொ தனன,தான தொ தனன]


Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……


Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]


Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

 

இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

 

Thanks

http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

என்ன என்ன என்ன ஆகிறேன் ?… என் காதலே ?… ;)

வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.

 

 

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 


பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்

மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 

விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்

உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ? 
செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…

தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.

பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

எனும் இதமான பாடல்.

 

இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

 

[இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

Play - Saami Varuguthu Kaathal

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

சாமி வருகுது காதல் சாமி வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

 

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

[சாமி வருகுது]

 

மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

 

ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

Kungumatha Vaika Oru Nethi Varuguthu
Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

[சாமி வருகுது]

 

[நாதஸ்வர ஆவர்த்தனம்]

 

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

Ul Nenjil Undiyalai Aada Varuguthu
Ul Nenjil Undiyalai Aada Varuguthu

Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

 

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

[சாமி வருகுது]

 

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

 

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen