இரண்டாவது உலகம் – செய்வினை (Schizophrenia)

நாம் நம் இளமை காலங்களில், பார்வைக்கு இதமான இயற்கை எழில்கள் அமைந்ததும், நறுமண சுகந்தம் வீசுவதாகவும், சுவை தரக்கூடிய பண்டங்களுடையதும், இனிய இன்னிசையுடன், அப்சரஸ்களுடன் சல்லாபித்து இருக்க கூடிய சொர்கத்தை மண்ணுலகில் நிறுவக்கூடிய முயற்சியை செய்கிறோம்.

முதுமை அடையும் போது அவற்றையே சொர்கத்திலும் அடையக்கூடிய முயற்சி செய்வதையே தனிமனித மற்றும் புனித கடமையாக கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறை தவறுகளை இழைக்கும்போதும் இச்சொர்கத்திற்கு நேர் எதிரான நரகத்திற்கு பயப்படுகிறோம்.

இவ்வாறான முயற்சிகளாலான வாழ்க்கையில் நம் ஆழ்மனதானது உறக்கத்தின்போதும் கனவுலகில் அதே போன்ற சொர்கங்களையும், நரகங்களையும் உருவாக்கி மகிழ்கிறது. இவ்வாறான கனவுலகில் கூட நாம் நம்முடைய சுய அடையாளத்தை இழக்காமலேயே ஜீவிக்கிறோம். நம்மில் ஒரு சதவிகிதத்தினர் (இந்தியாவில் மட்டும் 1 கோடி பேர்) இவற்றிற்கு நேர் எதிரான ஒரு இரண்டாம் உலகத்தை நேரடியாகவே அனுபவிக்கின்றனர். அவர்களின் நனவுலகை நம்முடைய கனவுலகில் நுழைந்து பார்க்கும்முயற்சியே இது.

உங்களது உலகம் தனிமையில் சோகத்தில் இருக்கும் தருணத்தில்ஆரம்பிக்கிறது. இனம் புரியாத யார் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திரும்ப திரும்ப திட்டுகின்றனர். தற்கொலை செய்து கொள் என குரல் மிரட்டுகிறது. பேய், பாம்பு போன்ற பயமுறுத்தும் உருவங்கள் திரும்ப திரும்ப தோன்றுகிறது, உங்களது அந்தரங்க பகுதிகளை உங்களது விருப்பதிற்கு மாறாக பார்ப்பது & தொடுவது போன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். தாங்க முடியாத நாற்றமும், உண்ணும் உணவில் விசம் அல்லது மலம் போன்றவை தட்டுபடுதல் போன்ற நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எதிர்வினை என்ன ?

பிரச்சிணை என்னவெனில் இச்சதி செயல் புரிபவர்கள் நீங்கள் தனிமையில் இருக்கும் போது தான் அதிகம் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இவற்றால் மிகக்கலவரமடையும் நீங்கள் உங்களுடன் இருக்கும் ஆத்மாத்மானவர்களுடன் இந்நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களால் தெளிவாக உணர முடிகிற இவற்றை, அவர்கள் ஆனால் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். 

குரல்களும், தோற்றங்களும் அருகில் தோன்றுவதால் இவற்றை செய்வது உங்களை தெரிந்தவர் மட்டுமே. எனவே தான் நெருங்கியவர்களும் கூட சுய ஆதாயம் கருதி உங்களை துன்புறுத்துபவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது என்ற முடிவிற்கு வருகிறீர்கள்.

எனவே அவர்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டி தடயத்தை கண்டுபிடித்து பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.  உங்களுக்கு கேட்கும் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள். அவற்றை பதிவு செய்வதில் தோல்வி அடையும் போது தான்சாதாரண மனிதர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தி வேலை செய்வதாக புரிந்து கொள்கிறீர்கள்.

இது நீங்கள் நேரடியாக சிலரிடம் கேட்டும் கதைகளில் படித்தும்இருக்கும் செய்வினை, வசியம், சூன்யம் ஆகியவற்றிற்கு சமமாக இருக்கிறது அல்லது படித்த நாவலில் வரும் CIA, RAW போன்ற உளவுத்துறை கையாளும் மனத்தை கட்டுபடுத்தும் தொழில்நுட்பத்திற்குஒப்பாக இருக்கிறது.

இவ்வாறு சமுதாய உறுப்பினர்கள் அணைவரும் கைவிட்டபின், மனிதனின் மிகப்பெரும் நம்பிக்கையான ஆன்மீகம் நோக்கி செல்கிறீர்கள். செய்வினைக்கு மாத கணக்கில் கோவிலில் ஹோமங்கள் செய்தோ, மசூதிகளில் தொழுகைகள் செய்தோ, சர்சுகளில் ஊழியம் செய்தோ நாட்களையும் பனத்தையும் செலவு செய்யும் போதும், மேலும் மேலும் குரல்களும், காட்சிகளும் அதிகரிக்கும் போது உங்களுடைய மிகப்பெரும் நம்பிக்கையும் சீர்குலைகிறது.

எனவே இத்தொல்லைகள் தாங்க முடியாத அளவிற்கு போகும் போது, உங்களால் முழுவதும் நம்ப பட்டவர்கள் அணைவரும் கை விட்ட பின், சட்டம் ஒன்று தான் வழியாக படுகிறது.காவல்துறையினரிடம் ஒரு குழுவோ, அமைப்போ அல்லது உங்களது வீட்டில் உள்ளவர்களோ அல்லதுஉடன் பணி புரிவர்களோ அல்லது அருகில் வசிப்பவர்களோ உங்களை கொடுமை படுத்துவதாக புகார்செய்கிறீர்கள்.

ஆனால் அவர்களோ உங்களின் புகாரை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். உங்களது பேற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தகவல் சொல்லி உங்களை ஒப்படைக்கின்றனர். உங்களைபெற்றோரோ/வாழ்க்கை துணையோ உங்களை திமிர் பிடித்தவர் என்றும் பிடிவாதகாரர் என்றும் பட்டம் கட்டி திட்டியும்/அடித்தும் வெறுப்பை  தொடர்ந்து ஏன் விதைத்தால் வேறு என்ன தான் செய்வது ?  எல்லோரும் உங்களை நக்கலாகபார்க்க ஆரம்பிக்கும் சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது. “கிறுக்கு”, “பைத்தியம்”போன்ற வார்த்தைகள் சுற்றி உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இப்படி உங்கள் வாழ்க்கையே நரக உலகத்திற்கு இட்டு சென்றால்இதன் முடிவு என்னவாக இருக்கும் என நிணைக்கிறீர்கள் ?

கனவுலகில் இருக்கும் நம்மால், நம் கனவை எளிதாக கலைத்து விட்டு எழுந்து விட முடிகிறது. ஆனால் உண்மையில் இம்மாதிரியான நனவுலகில் வாழும் மன பாதிப்புக்குள்ளானவர்களால் அவ்வாறு இயலுவதில்லை.

மேலே பார்த்த சூழ்நிலை ஒரு வகை எடுத்துகாட்டு மட்டுமே. இதற்கு எதிர்மாறாக, நன்றாக கலகலவென பழகும் சிலர், தீடீரென்று தங்களுடன் நன்றாக பழகியவரின்குரல், உருவத்தை கூட மறந்து போதல், யாரிடமும் பழகாமல் தங்களை ஒரு அறையினல் ஒதுக்கி கொள்ளுதல், தங்களுடைய அன்றாட கடமைகளான பல் துலக்குதல், மலம் கழித்தல் போன்றவற்றை கூட செய்ய முணையாமல் இருப்பது, என ஒவ்வொரு புலன்களையும் உணரும் திறன் மூளைக்கு மழுங்குதல்போன்றவற்றிற்கு ஆளாகக்கூடும். இது இரண்டாவது வகை.

வயிற்று வலியினால் தற்கொலை என பதியப்படும் பல வழக்குகள், செய்வினையால் குடும்பம் அழிந்தது என வருத்தப்படும் பல நிகழ்வுகள் என கூர்ந்து கவனித்துபார்த்தால், இந்நிகழ்வு உங்கள் கிராமத்தில் / பகுதியில் யாரேனும் ஒருவருக்கு நடந்ததாகதான் இருக்கும்.

செய்வினை என தவறாக கருதப்படும் ஸ்கிட்ஸோஃபிர்னியா (Schizophrenia - மனப்பித்து)

அறிகுறிகள்
1. மனப்பிரமைகள் tactile, auditory, visual, olfactory and gustatory hallucinations, ஐந்து புலன்களையும் உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வு( பார்வை, கேட்கும்திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி), எடுத்துகாட்டுகளில் முதலாவது கூடுதல்உணர்வுகள் எனவும், இரண்டாவது குறை உணர்வு எனவும் கொள்ளலாம் positive and negative (or deficit) symptoms 
2. திரிபுணர்வுப்பிணி (paranoid),
3. பயங்கரமான மருட்சி (delusion) அல்லது
4. ஒழுங்கில்லாத பேச்சும், சிந்தனையும் இவற்றுடன்
5. சமூக வழக்கங்கள் மற்றும் பணி செய்யும் திறன் திரிதல்

ஆகியவை ஸ்கிட்ஸோஃபிர்னியா(மனப்பித்து) எனும் மனதின் நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

  • சிறுவயதில் மோசமான சூழ்நிலைகளை சந்தித்து இருப்பவர்கள் (மோசமான தாய்/ தந்தை/ சகோதரர்கள்/நெருங்கிய உறவினர்கள்), வன்முறைக்கு ஆளாக்கபட்டவர்கள், பாலியல் ரீதியில் துன்புறுத்தபட்டவர்கள்,எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், கடும் வறுமைக்குள்ளானவர்கள், இன துவேசத்திற்கு ஆளானவர்கள்,கொடுமையான இடங்களில் வசிப்பவர்கள் இவ்வகையில் பாதிக்கபட வாய்ப்பு அதிகம்.
  •  நகரத்தில்வாழ்பவர்களும், அதிகமாக நண்பர்களை கொண்டிராதவர்களும், எளிதாக புதியவர்களுடன் பழக தெரியாதவர்களாலும்,நம்பிக்கை துரோகத்தால் பாதிக்க பட்டவர்களுமே இவ்வகையில் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
  •  இவையல்லாமல்மரபணு காரணமாக பரம்பரை(தாய், தந்தை, தாத்தா, பாட்டி) வழியிலும் இந்நோயால் பாதிக்கபடவாய்ப்பு இருக்கிறது.
  • மகப்பேற்றின்போது ஏற்படும் கோளாறுகளும் குழந்தையை இந்நோய் தாக்க காரணம்.
  •  மெதாம்ஃபெடமைன் மற்றும் கொக்கெயின் போன்ற போதை பொருள்களும் உளப்பிணிகளுக்குக் காரணமாகும் என்று அறியப்பட்டுள்ளது. மது, கஞ்சா போன்றவையும் , தவறான மருந்து உட்கொள்தலும் இந்நோய் உருவாக காரணமாக அமையலாம்.


ஆண்களிலும் பெண்களிலும் ஸ்கிசோஃப்ரினியாசம அளவிலேயே ஏற்படுகிறது; இதன் ஆரம்ப கட்டம் ஆண்களில் 20-28 வயதிலும் பெண்களில் 26-32 வயதிலுமாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுவது என்பது அரிதானது, அதைப்போலவே நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுஆகியவற்றிலும்இது அரிதானது.

மேலும் இந்த நோய் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து யாரை வேண்டுமானாலும் தாக்க கூடும். உதாரணமாக இராமானுஜம் (இவர் ஈரோட்டு சீனிவாசன் இராமானுஜம் அல்ல சென்னைகாரர்) எனும் மிகப்பெரிய இந்திய கணித மேதை இந்நோயினால் பாதிக்கப்பட்டு, சரியாக மருத்துவம்செய்யப்படாத காரணத்தால், இந்நோய் தொல்லை தாங்க முடியாமல், தனது 37 வயதிலேயே அதிகப்படியானமருந்துகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நோயிற்கு மருந்துகளும், திட்டமிட்ட மருத்துவமுறைகளும் உள்ளன என்பதும், இந்நோயை வெற்றி கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும்இருக்கிறார்கள் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

இந்நோயால் பாதிக்கப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்து 1994 வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்றவர் யு.எஸ் கணித மேதை திரு.ஜான் நேஷ் John Forbes Nash Jr . இவரை பற்றிய "எ ப்யூட்டி ஃபுல் மைன்ட்” ஸ்கிட்ஸோஃபிர்னியா பற்றி சரியாக சித்தரிக்கும் மிக அருமையான படம் (2001 வருடத்திற்கான ஆஸ்கார்விருது பெற்றது)

Schizophrenia நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து குடும்ப உதவியினால் வாழ்க்கையையும் அமைத்து கொண்டு பல முக்கிய தமிழ் படைப்புகள் எழுதிய தமிழ் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.

இந்தியர்களும், மனப்பித்தும்

இந்தியர்களுக்கு இவ்விசயத்தில் நேர்மறை நன்மைகளும், எதிர்மறை தீமையும் உண்டு. மிகப்பெரிய எதிர்மறை சூழ்நிலை என்னவெனில் செய்வினை, சூன்யம், வசியம், மாந்திரீகம் என்ற பெயரில் நடக்கும் தவறான வழிகாட்டல்கள் தான். படித்தவர்களும், பண்பானவர்களும்கூட இந்த முறைக்கு பலியாவதில் இருந்து தடுக்க முடிவதில்லை.

பாதிக்கபட்டவர் ஒருமுறை இவற்றை நம்ப ஆரம்பித்தால், அதிலிருந்து விடுபட்டு மனோ/மருத்துவ ரீதியான முறைக்கு கொண்டு வருவது மிகக்கடினமாகும். ஏனெனில் தங்களிடம் இப்பிரச்சிணைக்கு முழுமையான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர்.
ஆனால் நோயாளிக்கு இவற்றில் தீர்வு கிடைக்காமல் கேள்வி கேட்கும்போது, மேலும் பணம் பறிப்பதற்காகவும், தன் பெயர் கெட்டு விட கூடாது என்பதற்காகவும் பாதிக்கபட்டவர்களிடம் தங்களது தோல்வியை வெளிகாட்டி கொள்ள இந்த மாந்திரீகர்கள் தயங்குவர். எனவே வித விதமான பெயரில் புதுப்புது ஹோமங்கள் செய்ய தான் முற்படுவர்.

நோயாளிகள் தங்களது பிரச்சிணையின் உண்மை நிலையை புரிந்து கொள்வதே இந்நோயை தீர்க்க முக்கியமான விசயம். அப்போது தான் மருத்துவத்தின்அவசியத்தை புரிந்து கொண்டு சரியாக கடைபிடிப்பர்.

இவ்வகை நோயாளிகள் அதிகம் பாதிக்கபடுவது தனிமையாலும், கைவிடபட்டுவிட்டோம்என்ற மனநிலையாலுமே ஆகும். இதை சரி செய்வதற்கு மாறாக வழிபாட்டு தலங்களில் விடப்படுகின்றனர். எனவே வீடுகளிலும், கோவில்களிலும், தர்காவிலும், சர்சுகளிலும் கட்டி போடப்பட்டுள்ள நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கபடுகின்றனர்.

அவர்களுக்கு தேவை நமது ஆதரவும், அன்பான வார்த்தைகளும் தானே ஒழிய, வழிபாடு அளிக்கும் தனிமை அல்ல என்பதை முக்கியமாகஉணர வேண்டும்.

மேற்கத்திய கலாசாரத்தைஒப்பிடும் போது இந்தியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் உதவி செய்யும் குடும்ப அமைப்பு ஆகும். சரியாகபுரிந்து கொள்ள வைக்கபட்டால் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு பெற்றோரும், வாழ்க்கை துணையும்உதவி செய்யவே விரும்புகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நோயாளிகள்மிக விரைவில் குணமடையவும், குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவும் உதவுகிறது.

மருத்துவம்

நோயாளிகளின் பிரச்சிணையை அவர்கள் கேட்கும் ஒலிகளையும், காட்சிகளையும் வெளிப்படுத்தும் போதே பெரும்பாலும் மற்றவர்களுக்கு தெரிவிக்க படுகிறது. இப்பிரமை என்பது பிரச்சிணையின் வெளிப்பாடு மட்டுமே. அதுவே முழுப்பிரச்சிணை அல்ல. இப்பிரமையை தீர்க்க அவை தோன்றிய மூல காரணத்தை மனதை ஆய்வு செய்து நீக்குவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.

நோயாளிகளிடம் அவர்கள் உணர்வது வெறும் மன பிரமை மட்டுமே, அவை உண்மையல்ல என்று அறிவுரைகள்/விவாதங்கள் செய்வது பலனை அளிக்காது. அது எதிர்மறை தீமைகளை மட்டுமே விளைவிக்கும். எனவே நோயாளிகள் பிரமைகளின் மூலம் படும் துன்பத்தின் ஆழத்தை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முயல வேண்டும். 

இந்நோய் எவ்வளவு விரைவில் கண்டுபிடித்து கவனிக்க படுகிறதோ அவ்வளவுவிரைவில் குணமாக்க முடியும். இந்நோயை குணமாக்க மருந்துகளுடன் கூடிய கூட்டு மருத்துவம்நடைமுறைபடுத்த படுகிறது.
  • ஸ்கிசோஃப்ரினியாவுக்கான முதல் மருத்துவத் தெரிவு antipsychotic  ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும். இவை உளப்பிணியின் நேர்மறை அறிகுறிகளைக் குறைக்கலாம். பல உளப்பிணி எதிர்மருத்துவங்களும் அவற்றின் பிரதான விளைவை அளிக்க 7-14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
  • ஸ்கிசோஃப்ரினியாசிகிச்சையில் உளவியல் மருத்துவமும் பெருமளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது.
  •  புரிதிறன் நடத்தை சிகிச்சை(cognitive behavior therapy) குறிப்பிட்ட அறிவு திறன் அறிகுறிகளை இலக்காக கொள்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சுய மதிப்பு, சமூகத்தில்செயலாற்றும் திறன் மற்றும் உட்பார்வை ஆகியவற்றை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
  • ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள ஒருதனி நபருக்கான சிகிச்சையில் அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை அல்லது கல்வி, குறைந்த பட்சமாக அந்த இடையூடு நீண்ட காலத்திற்கானதாக இருக்கும்போது, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாரிடம் உதவி கேட்கலாம்?
schizophreniaக்குஎன்றே schizophrenia research and foundation of india எனும் அரசு சாரா நிறுவனம் 1984 ம் ஆண்டு  மனவியல் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டு சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது. இங்கே இலவசமாகவே மருத்துவ ஆலோசனையும் வழங்கி வருகின்றார்கள். மிக சிறந்த சேவையை முடிந்த அளவு கொடுக்கின்றார்கள்.

மருத்துவமனையில் எப்போது சேர்க்க வேண்டும்?
இந்நோய் அதிகம் பாதிக்கப்பட்ட சிலர் அபூர்வமாக சிலநேரங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அல்லது தற்கொலை போன்றசெயல்களிலும் ஈடுபடலாம். 

உதாரணமாக மும்பையில் தொடர் கொலைகளில் (9 பேர்) ஈடுபட்ட ராமன்ராகவ் Chronic paranoid schizophrenia நோயால்கடுமையாக பாதிக்கபட்டவர். அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு எஞ்சிய வாழ்நாள் முழுவதும்மன நோய் மருத்துவமனையில் கழித்தார்.

மிகவும் தீவிரமான நோயாளிகளில்-அதாவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரும் சாத்தியமிருந்தால் அவர்களை பலவந்தமாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியமாகலாம்; இருப்பினும், இவ்வாறு மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும், அங்கே தங்கியிருக்கும் கால அளவும் தற்போது குறைந்து வருகிறது.

References

அச்சில் எனது முதல் கட்டுரை : சமூக வலை தளங்களில்

தீக்கதிர் நாளிதலில் பிரதி ஞாயிறு வெளிவரும் வண்ணக்கதிர் புத்தகத்தில் 21 ஏப்ரல் 2013 இதழில் சமூக இணைய தளங்கள் : சில உண்மைகள் எனும் எனது முகப்புத்தக குறிப்பு (மொழிபெயர்ப்பு கட்டுரை) அச்சில் வெளியாகி இருக்கிறது.

இதுவே அச்சில் வெளியாகும் எனது முதல் படைப்பாகும். எனது முதல் கட்டுரையே கண்ணி தொழில்நுட்பம் தொடர்பானதாகவும், சமூகத்திற்கு  பயனளிக்கும் வகையில் இனவெறிக்கு எதிரானதாகவும் அமைந்தது தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

தீக்கதிர் & வண்ணக்கதிர் ஆசிரியர்களுக்கு நன்றிகள்.



விக்கி லீக்ஸில் இந்தியா தொடர்பான புது தகவல்கள்

விக்கி லீக்ஸ் “தி க்ளோபல் இண்டெலிஜென்ஸ்” எனும் தனியார் உலக புலனாய்வு அமைப்பின் ஈமெயில்களை 2012லேயே வெளியிட்டிருக்கிறது. இவ்வமைப்பு யுஸ் மட்டுமல்லாது பல பன்னாட்டு நிறுவன அமைப்புகளுக்கும் புலனாய்வு செய்து வந்துள்ளது.

முக்கியமாக பாகிஸ்தான், இந்தியா இடையிலான பல இராணுவ, பயங்கரவாத இரகசியங்களும் வெளிவந்துள்ளன. இது குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாதது ஆச்சரியமே ! இவற்றை கீழ்கண்ட இணைய தளத்தில் பார்வையிடலாம்.http://search.wikileaks.org/gifiles/?viewemailid=1688492
//On Monday February 27th, 2012, WikiLeaks began publishing The Global Intelligence Files, over five million e-mails from the Texas headquartered "global intelligence" company Stratfor. The e-mails date between July 2004 and late December 2011. //

//They reveal the inner workings of a company that fronts as an intelligence publisher, but provides confidential intelligence services to large corporations, such as Bhopal's Dow Chemical Co., Lockheed Martin, Northrop Grumman, Raytheon and government agencies, including the US Department of Homeland Security, the US Marines and the US Defence Intelligence Agency. The emails show Stratfor's web of informers, pay-off structure, payment laundering techniques and psychological methods.//


போபால் போராட்டகாரர்களை வேவு பார்த்ததற்கான செய்தி
//Stratfor, the US intelligence analysis firm, was hired by Dow Chemical to spy on activists protesting against the 1984 Bhopal gas leak, revealed WikiLeaks on Monday.//


குறிப்பாக பாகிஸ்தானின் அணுகுண்டுகள் பற்றிய விவாதம் முக்கியமானதாக கருத படுகிறது.
On 5/17/2011 11:50 AM, Kamran Bokhari wrote: They are obsessed with the idea that U.S. is out to de-nuclearizethem. So this will be the most heavily guarded secret in thecountry.

On 5/17/2011 11:33 AM, Fred Burton wrote: Yes But, we don't know know where the nukes are located on any givenday. The Pakis have not disclosed that data since 9-12-01. 

On 5/17/2011 10:31 AM, Chris Farnham wrote: Do we know how many they have? Without that knowledge asking where they are is useless. From: "Fred Burton" To: "Secure List" Sent: Wednesday, 18 May, 2011 1:15:25 AMSubject: Paki Nukes

Unless the Pakis disclose the locations of their nukes, wewill keepthem in a headlock on aid. We have no idea where they are.

பின்லேடனின் உடல் கடலுக்குள் எறியப்படவில்லை எனும் விவாதம்

//An email involving a Stratfor analyst stated that it had been determined that up to 12 officials in Pakistan's Inter-Services Intelligence (ISI) agency knew of Osama bin-Laden's safe house.[10] Another email indicated that Stratfor Vice President Fred Burton had knowledge of the killing of bin Laden, and that the body was not dumped at sea, but rather sent to Dover Air Force Base in the United States.[11] This further fueled doubts about the US Government's account of the killings.[12]//

இந்திய நகரங்களில் நிலங்களின் விலைகள் கருப்பு பணம் கொண்டு ஊதி பெருக்க பட்டுள்ளதாக வர்ணித்தல்
//The real estate sector is extremely overblown. Prices rose more than 400percent in some cases, but half of this is black money. It will take a fewyears at least for the real estate market to really see an effect becauseright now it cant be leveraged. Only when growth really starts to slow andppl are unable to cover these investments will we see the real estatemarket get hit (this is very true. property prices have skyrocketed inIndia and most of this is from black money)//

இந்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை தகவல் மூலமாக வர்ணித்தல்
//I need some time to talk to my contacts -- that would include JS (PAI) and JS (Americas), JS (Europe) in the MEA. I will also be tapping my contacts in Indian int agencies for this. One crucial contact I would be exploring is my good friend for 12 years, Jaipal Reddy, union minister for petroleum and natural gas. //

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு எதிரான புலானாய்வு போர் என வர்ணித்தல் 
//This Mail is from september 2011 and it is about the CIA and the ISI (Pakistan military Intelligence Agency = Inter-Services Intelligence) in Pakistan and it is about the opressing power of the USA in that country. Stratfor Member comments on this Insight View are like: “I find it more interesting that the Agency has declared an internal intelligence war on ISI” and more on that below on the EMail: “Nobody is trusted.” furthermore they say the “CIA” is using “Moscow Rules.” against Pakistan and the ISI.//

//There was a conversation that Islamabad facilitated in the UAE betweenDC and the Haqqanis but then these guys turned around and engaged in aseries of attacks. But the Pakistanis aren’t willing to take actionagainst them. Spoke with Mullen who told me he has been lied to by hisPak counterparts.

On the Pakistani side, the problem is that they deeply mistrust theAmericans and suspect that the U.S. is going behind its back andcutting its own deals with the insurgents. Look at how Tayyeb Agha ismissing after the revelations that the U.S. was dealing with him toreach Mullah Omar. I am getting the sense that the United States hasdecided to coerce Pakistan into compliance.//

இந்திய வல்லரசு கனவு கேள்விகுறி என விமர்சனம்
//If India cannot effectively shape the course of events in its own "immediate neighborhood," how can it credibly lay claim to its great power aspirations at home or abroad?//

பனிப்போருக்கு பின்னான இந்திய இராஜாங்க உறவு மேலாண்மை குறித்த பாராட்டு
//'Neat Balancing Act' Between Russia, US//The India-US defence relationship has progressed slowly in view of theweight of the past marred by sanctions, technology denials, targeting ofIndia's strategic programmes, arming of Pakistan etc.//

ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

சுபமஸ்து...து..து...து...

கூடுதல் தகவல்
கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

சவுதி பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை

ஒரு நற்செய்தியோடு தொடங்குவோம். “சவுதி அரசங்கம் குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 17 நல அமைப்புகளுக்கென அமைச்சரகமும், தினம் 16 மணி நேரமும், தொலைபேசியில் புகாரளிக்கும் புது வசதியும் செய்துள்ளது.” http://gulfnews.com/news/gulf/saudi-arabia/services-launched-to-help-victims-of-abuse-1.1143579

சில நாட்களுக்கு முன், 5 வயது சவுதி பெண் குழந்தை, இஸ்லாமிய மதபோதகராக பணி செய்யும் அதன் தந்தையால் வன்கொடுமை செய்யபட்டதும், அந்த பாலியல் வெறியன் “இரத்த பணம்” கொடுத்து வெளிவர இருந்ததும் சமூக தளங்களில் பரபரப்பாக கண்டிக்க பட்டது.

சிறிது தினங்களுக்கு முன் சில மத வெறியர்கள் சவுதி அரசாங்கத்தின் இணைய தளத்தினை சுட்டிகாட்டி, அந்த ஆள் நல்லவன் போலவும், சவுதி நீதிமன்றம் கடுமையாக இருக்கிறது எனவும், எனவே கண்டித்தவர்கள் மன்னிப்பு /மறுப்பு கோர வேண்டும் என்பது போல செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

உலக அளவில் பல செய்தி பத்திரிக்கையில் வந்த செய்தி எவ்வாறு பொய்யாக இருக்க முடியும் என்ற ஆச்சர்யம் தான் உடனே எழுந்தது. “கெட்டிகாரன் புளுகு” சீக்கிரம் வெளி வந்து தானே ஆக வேண்டும் ?

இதோ உண்மைகள். வெளியிட்டு இருப்பது பிரபல ஆங்கில  & அரபு செய்தி நிறுவனங்கள் http://www.independent.co.uk/news/world/middle-east/saudi-royal-family-intervenes-over-preacher-released-despite-raping-and-killing-daughter-8491812.html

அரபு செய்திகள்

  1. பெண் குழந்தையின் மண்டை,கை,கால்,முதுகு எழும்புகள் உடைக்க பட்டு, சில உடல் பகுதிகள் எரிக்கப்பட்டு, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை. இதை மேலுள்ள அரபி பத்திரிக்கை செய்தியில் மருத்துவர் அறிவிக்கையில் காணலாம்.
  2. Al-Ghamdi எனும் கொடூரன் தனது குழந்தையை தடி, ஒயர் கொண்டு தாக்கியதை ஒப்பு கொண்டான் என பெண்கள் நல அமைப்பு கூறி இருக்கிறது
  3. சவுதி மத சட்டத்தின் படி குழந்தையை கொன்ற தந்தையையும், மணைவியை கொன்ற கணவனுக்கும் மரண தண்டனை கிடையாது
  4. ”நீதி”பதி Altkhvafa Ghamdi  மதசட்டப்படி ”சிறிது காலம் ஜெயிலில் இருந்ததால்,  இரத்த பணம் மட்டுமே கோர முடியும்” என விசாரணையின் போது கருத்து உரைத்ததும் உண்மை. அந்த கொடூரன் வெளி வர இருந்ததும் உண்மை
  5. இச்செய்தியை கேள்வி பட்ட போராளிகள் நியாயம் கிடைக்க வேண்டி #AnaLama (I Am Lama) என்று சமூக இணையதளங்களில் போராடினர். உலகமே காறி துப்பியது . https://twitter.com/search?q=%23analama&src=typd
  6. பிறகு தான், எதிர்ப்பை பார்த்து சவுதி அரச குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அக்கொடூரனுக்கு நீண்ட நாள் சிறை தண்டனை கிடைக்க உறுதி செய்ய முயற்சி செய்கின்றனர்.  அந்த கொடூரனின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 
  7. போராட்டத்தின் பயனாக குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 16 மணி நேர தொலைபேசியில் புகாரளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே மத சட்டம் இக் குழந்தைக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு பதிலளிக்கவில்லை, மீண்டும் இதே தவறுகள் நடைபெறாமல் தடுக்கவில்லை. இன்றைய காலகட்டத்தின் சமூக மாற்றங்கள் எல்லாம், நியாயமான போராளிகளின் நல்லெண்ண முயற்சியிலும், தொழில்நுட்பத்தின் உதவியினாலுமே நடக்கின்றன என அணைவரும் அறிய வேண்டும்.

இவ்வாறு சமூக இணையதளத்தில், இஸ்லாமிய பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்வது யார் ? மதத்திற்காக பொய் பேசியவர்களுக்காக மன்னிப்பு கோரப்போவது யார் ?

மேலும் ஆதாரங்கள்
  • http://www.dailymail.co.uk/news/article-2273171/Fayhan-al-Ghamdi-raped-tortured-daughter-5-death-escapes-light-sentence.html
  • http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/article3685080.ece
  • http://rt.com/news/saudi-preacher-fine-rape-333/

இந்திய முஸ்லிம் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு காந்தி காரணமா ?


இந்திய முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்ததற்கு/பின் தங்கியதற்கு, சுதந்திர போராட்டத்தின் போது  காந்தியின் பேச்சை கேட்டதனால் தான் என்று சமீபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பொய் பேசிய மததலைவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். 


பாகிஸ்தானிய பத்திரிக்கையில் வெளியானது இந்த கட்டுரை. இதை எழுதியவர் பாகிஸ்தானிய யுனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். //The writer retired as professor of physics from Quaid-e-Azam University, Islamabad//

அக்பருக்கு பிறகு வந்த கால கட்டத்தில்,  200 வருடத்திற்கு முன்பே, அறிவியல்/பகுத்தறிவிற்கு எதிராக முக்கிய  மத தலைவர்களால்விதிக்கப்பட்ட பத்வாக்களால் எவ்வாறு கணிதம், அறிவியல் பாடங்கள் புறக்கணிக்க பட்டன, மத போதணைகள் மட்டும் கற்பிக்க பட்டன என்று விளக்குகிறார்.

பாகிஸ்தானிய பிரிவினையின் பிதாமகர்களான (சையித், இக்பால் எனும் இருவரையும் ஒப்புவமை செய்து பிற்போக்கான இக்பால் என்பவர் எவ்வாறு முன்னிலை படுத்த படுகிறார், அதனால் எவ்வாறு முஸ்லிம்கள் கல்வியினமையால் அவதி படுகின்றனர் என்று விவரிக்கிறார்.



இதை வெளியிடுவதற்கு காரணம் பெரும்பாண்மை இந்திய முஸ்லிம் சகோதரர்கள் தங்களின் பிற்போக்கிற்கு உண்மையான காரணமான மத வெறியர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து அறிவியல் படித்து அறிவு பூர்ணமாக சிந்திக்க வேண்டும் எனும் ஆவலே.



//It was a difficult enterprise to take on. The period after the end of Emperor Akbar’s reign had been one of unbroken anti-science and anti-rationalist conservatism. Some 200 years before Sir Syed, Sheikh Ahmed Sirhindi and other influential religious figures had issued fatwas against mathematics and the secular sciences, and demanded that the education of Muslims be limited to religious books. Initially Sir Syed was also inclined to this point of view but, following his gradual transformation during the 1850s, he rejected this view and challenged his contemporaries.


In Tahzib-ul-Akhlaq, he writes: “Yes, if the Mussulman be a true warrior and thinks his religion correct, then let him come fearlessly to the battleground and do unto Western knowledge and modern research what his forefathers did to Greek philosophy. Only then shall our religious books be of any real use. Mere parroting and praising ourselves will not do.” (“Apnay moon mian mithoo kahney say koee faida nahin”)



In his mind, the way forward was clear: Indian Muslims must learn the English language, practice the scientific method, accept that physical phenomena are explainable by physics only, and support British imperial rule against the rule of Mughals (who had by then sunk into decadence and depravity). This last piece of advice made him a target of bitter ridicule by secular nationalists such as Jamaluddin Afghani.//


//In the battle for Pakistan’s soul, Sir Syed’s rational approach ultimately lost out and the Allama’s call on emotive reasoning won. Iqbal said what people wanted to hear — and his genius lay in crafting it with beautifully chosen words. Unfortunately, his prescriptions for reconstructing society cannot help us in digging ourselves out of a hole.//